நேரிசை
வெண்பா
அல்லிநாட்
டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா
டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர்
குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த
விளக்கு.
கட்டளைக்
கலித்துறை
கோலச்
சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்
மாலத்
தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த நாச்சியார் திருமொழி
1. தையொரு திங்கள்
அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
504 தையொரு
திங்களும் தரைவிளக்கித்
தண்மண்
டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண்
மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக்
கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு
மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு
மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர்
தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட
வற்கென்னை விதிக்கிற்றியே. 1
505 வெள்ளைநுண்
மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப்
பதன்முன்னம் துறைபடிந்து,
முள்ளுமில்
லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை
நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ்
பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண
னென்பதோர் பேரெழுதி,
புள்ளினை
வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினில்
புகவென்னை யெய்கிற்றியே. 2
506 மத்தநன் னறுமலர்
முருக்கமலர்
கொண்டுமுப்
போதுமுன் னடிவணங்கி,
தத்துவ
மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத்
தழித்துன்னை வைதிடாமே,
கொத்தலர்
பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த
னென்பதோர் பேரேழுதி,
வித்தகன்
வேங்கட வாணனென்னும்
விளக்கினில்
புகவென்னை விதிக்கிற்றியே. 3
507 சுவரில்
புராணநின் பேரேழுதிச்
சுறவநற்
கொடிகளும் துரங்கங்களும்,
கவரிப்
பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந்
தேன்கண்டாய் காமதேவா,
அவரைப்
பிராயந் தொடங்கிஎன்றும்
ஆதரித்
தெழுந்தவென் தடமுலைகள்,
துவரைப்
பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத்
தேனொல்லை விதிக்கிற்றியே. 4
508 வானிடை வாழுமவ்
வானவர்க்கு
மறையவர்
வேள்வியில் வகுத்தஅவி,
கானிடைத்
திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும்
மோப்பதும் செய்வதொப்ப,
ஊனிடை
யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித்
தெழுந்தவென் தடமுலைகள்,
மானிட
வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்
லேன்கண்டாய் மன்மதனே. 5
509 உருவுடை யாரிளை
யார்கள்நல்லார்
ஓத்துவல்
லார்களைக் கொண்டு,வைகல்
தெருவிடை
யெதிர்கொண்டு பங்குனிநாள்
திருந்தவே
நோற்கின்றேன் காமதேவா,
கருவுடை
முகில்வண்ணன் காயாவண்ணன்
கருவிளை
போல்வண்ணன், கமலவண்ணத்
திருவுடை
முகத்தினில் திருக்கண்களால்
திருந்தவே
நோக்கெனக் கருளுகண்டய். 6
510 காயுடை
நெல்லொடு கரும்பமைத்துக்
கட்டி யரிசி
யவலமைத்து,
வாயுடை
மறையவர் மந்திரத்தால்
மன்மத
னே.உன்னை வணங்குகின்றேன்,
தேயமுன்
னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக
ளாலென்னைத் தீண்டும்வண்ணம்,
சாயுடை
வயிறுமென் தடமுலையும்
தரணியில்
தலைப்புகழ் தரக்கிற்றியே. 7
511 மாசுடை
யுடம்பொடு தலையுலறி
வாய்ப்புரம்
வெளுத்தொரு போதுமுண்டு,
தேசுடை
திறலுடைக் காமதேவா.
நோற்கின்ற
நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்,
பேசுவ
தொன்றுண்டிங் கெம்பெருமான்
பெண்மையைத்
தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ
நம்பியைக் கால்பிடிப்பாள்
என்னுமிப்
பேறெனக் கருளுகண்டாய். 8
512 தொழுதுமுப்
போதுமுன் னடிவணங்கித்
தூமலர்
தூய்த்தொழு தேத்துகின்றேன்,
பழுதின்றிப்
பாற்கடல் வண்ணனுக்கே
பணிசெய்து
வாழப் பெறாவிடில்நான்,
அழுதழு
தலமந்தம் மாவழங்க
ஆற்றவு
மதுவுனக் குறைக்குங்கண்டாய்,
உழுவதோ ரெருத்தினை
நுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின்
றித்துரந் தாலொக்குமே. 9
513 கருப்புவில்
மலர்க்கணைக் காமவேளைக்
கழலிணை
பணிந்தங்கோர் கரியலற,
மருப்பினை
யொசித்துப்புள் வாய்பிளந்த
மணிவண்ணற்
கென்னை வகுத்திடென்று,
பொருப்பன்ன
மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர்
கோன்விட்டு சித்தன்கோதை,
விருப்புடை
யின்தமிழ் மாலைவல்லார்
விண்ணவர்
கோனடி நண்ணுவரே. 10
2: நாமமாயிரம்
கலி
விருத்தம்
514 நாமமாயிர
மேத்தநின்ற
நாராயணாநர னே,உன்னை
மாமிதன்மக
னாகப்பெற்றா
லெமக்குவாதை
தவிருமே,
காமன்போதரு
காலமென்றுபங்
குனிநாள்கடை
பாரித்தோம்,
தீமைசெய்யும்
சிரீதரா.எங்கள்
சிற்றில்வந்து
சிதையேலே. 1
515 இன்றுமுற்றும்
முதுகுநோவ
இருந்திழைத்தஇச்
சிற்றிலை,
நன்றும்கண்ணுற
நோக்கிநாங்கொளும்
ஆர்வந்தன்னைத்
தணிகிடாய்,
அன்றுபாலக
னாகியாலிலை
மேல்துயின்றவெம்
மாதியாய்,
என்றுமுன்றனக்
கெங்கள்மேலிரக்
கம்மெழாததெம்
பாவமே. 2
516 குண்டுநீருறை
கோளரீ.மத
யானைகோள்விடுத்
தாய்,உன்னைக்
கண்டுமாலுறு
வோங்களைக்கடைக்
கண்களாலிட்டு
வாதியேல்,
வண்டல்நுண்மணல்
தெள்ளியாம்வளைக்
கைகளால்சிர
மப்பட்டோ ம்,
தெண்டிரைக்கடற்
பள்ளியாய்.எங்கள்
சிற்றில்வந்து
சிதையேலே. 3
517 பெய்யுமாமுகில்
போல்வண்ணா.உன்றன்,
பேச்சும்செய்கையும், எங்களை
மையலேற்றி
மயக்கவுன்முகம்
மாயமந்திரந்
தான்கொலோ,
நொய்யர்பிள்ளைக
ளென்பதற்குன்னை
நோவநாங்களு
ரைக்கிலோம்,
செய்யதாமரைக்
கண்ணினாயெங்கள்
சிற்றில்வந்து
சிதையேலே. 4
518 வெள்ளைநுண்மணல்
கொண்டுசிற்றில்
விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்களி
ழைத்தகோல
மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி
யுருகலல்லால்
உரோடமொன்று
மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா.கேசவா.உன்
முகத்தனகண்க
ளல்லவே. 5
519 முற்றிலாதபிள்
ளைகளோம்முலை
போந்திலாதோமை, நாடொறும்
சிற்றில்மேலிட்டுக்
கொண்டுநீசிறி
துண்டுதிண்ணென
நாமது
கற்றிலோம்,கட லையடைத்தரக்-
கர்குலங்களை
முற்றவும்
செற்று,இலங்கையைப் பூசலாக்கிய
சேவகா.எம்மை
வாதியேல். 6
520 பேதநன்கறி
வார்களோடிவை
பேசினால்பெரி
திஞ்சுவை,
யாதுமொன்றறி
யாதபிள்ளைக
ளோமைநீநலிந்
தென்பயன்,
ஓதமாகடல்
வண்ணா.உன்மண
வாட்டிமாரொடு
சூழறும்,
சேதுபந்தம்
திருத்தினாயெங்கள்
சிற்றில்வந்து
சிதையேலே. 7
521 வட்டவாய்ச்சிறு
தூதையோடு
சிறுசுளகும்மண
லுங்கொண்டு,
இட்டமாவிளை
யாடுவோங்களைச்
சிற்றிலீடழித்
தென்பயன்,
தொட்டுதைத்துநலி
யேல்கண்டாய்சுடர்ச்
சக்கரம்கையி
லேந்தினாய்,
கட்டியும்கைத்
தாலின்னாமை
அறிதியேகடல்
வண்ணனே. 8
522 முற்றத்தூடு
புகுந்துநின்முகங்
காட்டிப்புன்முறு
வல்செய்து,
சிற்றிலோடெங்கள்
சிந்தையும்சிதைக்
கக்கடவையோ
கோவிந்தா,
முற்றமண்ணிடம்
தாவிவிண்ணுற
நீண்டளந்துகொண்
டாய்,எம்மைப்-
பற்றிமெய்ப்பிணக்
கிட்டக்காலிந்தப்
பக்கம்நின்றவ
ரெஞ்சொல்லார்? 9
523 சீதைவாயமு
தமுண்டாய்.எங்கள்
சிற்றில்நீசிதை
யேல்.என்று,
வீதிவாய்விளை
யாடுமாயர்
சிறுமியர்மழ
லைச்சொல்லை,
வேதவாய்த்தொழி
லார்கள்வாழ்வில்லி
புத்தூர்மன்விட்டு
சித்தன்றன்,
கோதைவாய்த்தமிழ்
வல்லவர்குறை
வின்றிவைகுந்தம்
சேர்வரே. 10
3. கோழியழைப்பதன்
524 கோழி யழைப்பதன்
முன்னம்
குடைந்துநீ
ராடுவான் போந்தோம்,
ஆழியஞ் செல்வ
னெழுந்தான்
அரவணை
மேல்பள்ளி கொண்டாய்,
ஏழைமை
யாற்றவும் பட்டோ ம்
இனியென்றும்
பொய்கைக்கு வாரோம்,
தோழியும்
நானும் தொழுதோம்
துகிலைப்
பணித்தரு ளாயே. 1
525 இதுவென் புகுந்ததிங்
கந்தோ.
இப்பொய்கைக்
கெவ்வாறு வந்தாய்,
மதுவின்
துழாய்முடி மாலே.
மாயனே.எங்க
ளமுதே,
விதியின்மை
யாலது மாட்டோ ம்
வித்தகப்
பிள்ளாய். விரையேல்,
குதிகொண்
டரவில் நடித்தாய்.
குருந்திடைக்
கூறை பணியாய். 2
526 எல்லே யீதென்ன
இளமை
எம்மனை
மார்காணி லொட்டார்,
பொல்லாங்கீ
தென்று கருதாய்
பூங்குருந்
தேறி யிருத்தி,
வில்லாலி
லங்கை யழித்தாய்.நீ
வேண்டிய
தெல்லாம் தருவோம்,
பல்லாரும்
காணாமே போவோம்
பட்டைப்
பணித்தரு ளாயே. 3
527 பரக்க
விழித்தெங்கும் நோக்கிப்
பலர்குடைந்
தாடும் சுனையில்,
அரக்கநில்
லாகண்ண நீர்கள்
அலமரு
கின்றவா பாராய்,
இரக்கமே
லொன்று மிலாதாய்.
இலங்கை
யழித்த பிரானே,
குரக்கர சாவ
தறிந்தோம்
குருந்திடைக்
கூறை பணியாய். 4
528 காலைக் கதுவிடு
கின்ற
கயலோடு வாளை
விரவி,
வேலைப்
பிடித்தெந்னை மார்கள்
ஓட்டிலென்
னவிளை யாட்டோ ,
கோலச்சிற்
றாடை பலவுங்
கொண்டுநீ
யேறி யிராதே,
கோலங் கரிய
பிரானே.
குருந்திடைக்
கூறை பணியாய். 5
529 தடத்தவிழ்
தாமரைப் பொய்கைத்
தாள்களெங்
காலைக் கதுவ,
விடத்தே
ளெறிந்தாலே போல
வேதனை
யற்றவும் பட்டோ ம்
குடத்தை
யெடுத்தேற விட்டுக்
கூத்தாட
வல்லஎங் கோவே,
படிற்றையெல்
லாம்தவிர்ந் தெங்கள்
பட்டைப்
பணித்தரு ளாயே. 6
530 நீரிலே
நின்றயர்க் கின்றோம்
நீதியல் லாதன
செய்தாய்,
ஊரகம்
சாலவும் சேய்த்தால்
ஊழியெல்
லாமுணர் வானே,
ஆர்வ முனக்கே
யுடையோம்
அம்மனை
மார்காணி லொட்டார்,
போர
விடாயெங்கள் பட்டைப்
பூங்குருந்
தேறியி ராதே. 7
531 மாமிமார்
மக்களே யல்லோம்
மற்றுமிங்
கெல்லாரும் போந்தார்,
தூமலர்க்
கண்கள் வளரத்
தொல்லையி
ராத்துயில் வானே,
சேமமே
லன்றிது சாலச்
சிக்கென
நாமிது சொன்னோம்,
கோமள ஆயர்கொ
ழுந்தே.
குருந்திடைக்
கூறை பணியாய். 8
532 கஞ்சன்
வலைவைத்த வன்று
காரிரு
ளெல்லில் பிழைத்து,
நெஞ்சுதுக்
கம்செய்யப் போந்தாய்
நின்றஇக்
கன்னிய ரோமை,
அஞ்ச
உரப்பாள் அசோதை
ஆணாட
விட்டிட் டிருக்கும்,
வஞ்சகப்
பேய்ச்சிபா லுண்ட
மசிமையி
லீ.கூறை தாராய். 9
533 கன்னிய
ரோடெங்கள் நம்பி
கரிய
பிரான்விளை யாட்டை,
பொன்னியல்
மாடங்கள் சூழ்ந்த
புதுவையர்
கோன்பட்டன் கோதை,
இன்னிசை
யால்சொன்ன மாலை
ஈரைந்தும்
வல்லவர் தாம்போய்,
மன்னிய மாதவ
னோடு
வைகுந்தம்
புக்கிருப் பாரே. 10
4. தெள்ளியார் பலர்
கலி
விருத்தம்
534 தெள்ளி
யார்பலர் கைதொழும் தேவனார்,
வள்ளல்
மாலிருஞ் சோலை மணாளனார்,
பள்ளி கொள்ளு
மிடத்தடி கொட்டிட,
கொள்ளு
மாகில்நீ கூடிடு கூடலே. 1
535 காட்டில்
வேங்கடம் கண்ண புரநகர்,
வாட்ட மின்றி
மகிழ்ந்துறை வாமனன்,
ஓட்ட
ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும்
கூட்டு
மாகில்நீ கூடிடு கூடலே. 2
536 பூம கன்புகழ்
வானவர் போற்றுதற்
காம கன்,அணி வாணுதல் தேவகி
மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம்,
கோம கன்வரில்
கூடிடு கூடலே. 3
537 ஆய்ச்சி
மார்களு மாயரு மஞ்சிட,
பூத்த
நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து,
வாய்த்த
காளியன் மேல்நட மாடிய,
கூத்த
னார்வரில் கூடிடு கூடலே. 4
538 மாட மாளிகை
சூழ்மது ரைப்பதி
நாடி, நந்தெரு வின்நடு வேவந்திட்டு,
ஓடை மாமத
யானை யுதைத்தவன்,
கூடு
மாகில்நீ கூடிடு கூடலே. 5
539 அற்ற வன்மரு
தம்முறி யநடை
கற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்,திக ழும்மது ரைப்பதி,
கொற்ற
வன்வரில் கூடிடு கூடலே. 6
540 அன்றின் னாதன
செய்சிசு பாலனும்,
நின்ற
நீள்மரு தும்மெரு தும்புள்ளும்,
வென்றி
வேல்விறற் கஞ்சனும் வீழ,முன்
கொன்ற
வன்வரில் கூடிடு கூடலே. 7
541 ஆவ லன்புட
யார்தம் மனத்தன்றி
மேவ லன்,விரை சூழ்துவ ராபதிக்
காவ லன்,கன்று மேய்த்து விளையாடும்,
கோவ லன்வரில்
கூடிடு கூடலே. 8
542 கொண்ட கோலக்
குறளுரு வாய்ச்சென்று,
பண்டு மாவலி
தன்பெரு வேள்வியில்,
அண்ட மும்நில
னும்அடி யொன்றினால்,
கொண்ட
வன்வரில் கூடிடு கூடலே. 9
543 பழகு நான்மறை
யின்பொரு ளாய்,மதம்
ஒழுகு வாரண
முய்ய வளித்த,எம்
அழக னாரணி
யாய்ச்சியர் சிந்தையுள்,
குழக
னார்வரில் கூடிடு கூடலே. 10
544 ஊடல் கூட
லுணர்தல் புணர்தலை,
நீடு நின்ற
நிறைபுக ழாய்ச்சியர்,
கூட
லைக்குழற் கோதைமுன் கூறிய,
பாடல்
பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. 11
5. மன்னு
பெரும்புகழ்
எழுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
545 மன்னு
பெரும்புகழ் மாதவன் மாமணி
வண்ணன்
மணிமுடி மைந்தன்
தன்னை, உகந்தது காரண மாகஎன்
சங்கிழக்
கும்வழக் குண்டே,
புன்னை
குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பினில்
வாழும் குயிலே,
பன்னியெப்
போது மிருந்து விரைந்தென்
பவளவா
யன்வரக் கூவாய். 1
546 வெள்ளை விளிசங்
கிடங்கையிற் கொண்ட
விமல
னெனக்குருக் காட்டான்,
உள்ளம்
புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து
கூத்தாட்டுக் காணும்,
கள்ளவிழ்
செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை
பாடுங் குயிலே,
மெள்ள
விருந்து மிழற்றி மிழற்றாதென்
வேங்கட
வன்வரக் கூவாய். 2
547 மாதலி
தேர்முன்பு கோல்கொள்ள மாயன்
இராவணன் மேல்,சர மாரி
தாய்தலை
யற்றற்று வீழத் தொடுத்த
தலைவன்
வரவெங்குங் காணேன்,
போதலர்
காவில் புதுமணம் நாறப்
பொறிவண்டின்
காமரங் கேட்டு,உன்
காதலி
யோடுடன் வாழ்குயி லே.என்
கருமாணிக்
கம்வரக் கூவாய். 3
548 என்புரு கியின
வேல்நெடுங் கண்கள்
இமைபொருந்
தாபல நாளும்,
துன்பக்
கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி
பெறாதுழல் கின்றேன்,
அன்புடை
யாரைப் பிரிவுறு நோயது
நீயு மறிதி
குயிலே,
பொன்புரை
மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணிய
னைவரக் கூவாய். 4
549 மென்னடை யன்னம்
பரந்துவிளையாடும்
வில்லிபுத்
தூருறை வான்றன்,
பொன்னடி
காண்பதோ ராசயி னாலென்
பொருகயற்
கண்ணிணை துஞ்சா,
இன்னடி
சிலோடு பாலமு தூட்டி
எடுத்தவென்
கோலக் கிளியை,
உன்னொடு
தோழமை கொள்வன் குயிலே.
உலகளந்
தான்வரக் கூவாய். 5
550 எத்திசை யுமம
ரர்பணிந் தேத்தும்
இருடீகே
சன்வலி செய்ய,
முத்தன்ன
வெண்முறு வற்செய்ய வாயும்
முலயு
மழகழிந் தேன்நான்,
கொத்தலர்
காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு
மிளங்குயி லே,என்
தத்துவ
னைவரக் கூகிற்றி யாகில்
தலையல்லால்
கைம்மாறி லேனே. 6
551 பொங்கிய
பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோ
ராசயி னால்,என்
கொங்கை
கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை
யாகுலஞ் செய்யும்,
அங்குயி
லே.உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும்
சங்குமொண் தண்டும்,
தங்கிய கையவ
னைவரக் கூவில்நீ,
சாலத் தருமம்
பெறுதி. 7
552 சார்ங்கம் வளைய
வலிக்கும் தடக்கைச்
சதுரன்
பொருத்த முடையன்,
நாங்களெம்
மில்லிருந் தொட்டிய கச்சங்கம்
நானு மவனு
மறிதும்,
தேங்கனி
மாம்பொழில் செந்தளிர் கோதும்
சிறுகுயி லே,திரு மாலை
ஆங்கு
விரைந்தொல்லை கூகிற்றி யாகில்
அவனைநான்
செய்வன காணே. 8
553 பைங்கிளி
வண்ணன் சிரீதர னென்பதோர்
பாசத்
தகப்பட்டி ருந்தேன்,
பொங்கொளி
வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி
லே.குறிக்
கொண்டிது நீகேள்,
சங்கொடு
சக்கரத் தான்வரக் கூவுதல்
பொன்வளை
கொண்டு தருதல்,
இங்குள்ள
காவினில் வாழக் கருதில்
இரண்டத்தொன்
றேல்திண்ணம் வேண்டும். 9
554 அன்றுல கம்மளந்
தானை யுகந்தடி-
மைக்கண
வன்வலி செய்ய,
தென்றலுந்
திங்களு மூடறுத் தென்னை
நலியும்
முறைமை யறியேன்,
என்றுமிக்
காவி லிருந்திருந் தென்னைத்
தகர்த்தாதே
நீயும் குயிலே,
இன்றுநா ராயண
னைவரக் கூவாயேல்
இங்குத்தை
நின்றும் துரப்பன். 10
555 விண்ணுற
நீண்டடி தாவிய மைந்தனை
வேற்கண்
மடந்தை விரும்பி,
கண்ணுற
வென்கடல் வண்ணனைக் கூவு
கருங்குயி
லே.என்ற மாற்றம்,
பண்ணுற
நான்மறை யோர்புது வைமன்னன்
பட்டர்பி
ரான்கோதை சொன்ன,
நண்ணுறு வாசக
மாலைவல் லார்நமோ-
நாராய
ணாயவென் பாரே. 11
6. வாரணமாயிரம்
கலி
விருத்தம்
556 வாரண மாயிரம்
சூழவ லம்செய்து,
நாரண நம்பி
நடக்கின்றா னென்றெதிர்,
பூரண
பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம்
நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 1
557 நாளைவ துவைம
ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு
பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன்
கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு
குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2
558 இந்திர
னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந்
தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக்
கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி
சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3
559 நாற்றிசைத்
தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச்
சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை
கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண்
கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4
560 கதிரொளி தீபம்
கலசமு டனேந்தி,
சதிரிள
மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார்
மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப்
புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5
561 மத்தளம் கொட்டவ
ரிசங்கம் நின்றூத,
முத்துடைத்
தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன்
நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம்
பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6
562 வாய்நல்
லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல்
படுத்துப் பரிதிவைத்து,
காய்சின
மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம்
செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7
563 இம்மைக்கு
மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு
டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய
திருக்கையால் தாள்பற்றி,
அம்மி
மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8
564 வரிசிலை
வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம்
பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக
னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந்
தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9
565 குங்கும
மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து
மணநீர்,
அங்கவ னோடு
முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன
மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10
566 ஆயனுக்
காகத்தான் கண்ட கனாவினை,
வேயர்
புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய
தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன்
மக்களைப் பெற்று மகிழ்வரே. 11
7. கருப்பூரம்
நாறுமோ
கலிவிருத்தம்
567 கருப்பூரம்
நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச்
செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த
மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக்
கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. 1
568 கடலில் பிறந்து
கருதாது, பஞ்சசனன்
உடலில்
வளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில்
குடியேறித் தீய வசுரர்,
நடலைப்
படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2
569 தடவரை யின்மீதே
சரற்கால சந்திரன்,
இடையுவா
வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்
வடமதுரை
யார்மன்னன் வாசுதே வன்கையில்,
குடியேறி
வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. 3
570 சந்திர
மண்டலம்போல் தாமோத ரன்கையில்,
அந்தர
மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,
மந்திரம்
கொள்வாயே போலும் வலம்புரியே,
இந்திரனு
முன்னோடு செல்வத்துக் கேலானே. 4
571 உன்னோ டுடனே
யொருகடலில் வாழ்வாரை,
இன்னா
ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,
மன்னாகி
நின்ற மதுசூதன் வாயமுதம்,
பன்னாளு
முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5
572 போய்த்தீர்த்த
மாடாதே நின்ற புணர்மருதம்,
சாய்த்தீர்த்தான்
கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு
சேய்த்தீர்த
மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம்
பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.
573 செங்கமல
நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்
செங்கட்
கருமேனி வாசுதே வனுடய,
அங்கைத்
தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா.
உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7
574 உண்பது சொல்லி
லுலகளந்தான் வாயமுதம்,
கண்படை
கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,
பெண்படை
யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,
பண்பல
செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8
575 பதினாறா
மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,
மதுவாயில்
கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,
பொதுவாக
வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,
சிதையாரோ
வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9
576 பாஞ்சசன்
னியத்தைப் பற்பநா பனோடும்,
வாய்ந்தபெ
ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,
ஏய்ந்தபுகழ்ப்
பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,
ஆய்ந்தேத்த
வல்லா ரவரு மணுக்கரே. 10
8. விண்ணீல
மேலாப்பு
தரவு
கொச்சகக் கலிப்பா
577 விண்ணீல
மேலாப்பு
விரித்தாற்போல்
மேகங்காள்,
தெண்ணீர்பாய்
வேங்கடத்தென்
திருமாலும்
போந்தானே,
கண்ணீர்கள்
முலைக்குவட்டில்
துளிசோரச்
சோர்வேனை,
பெண்ணீர்மை
யீடழிக்கும்
இதுதமக்கோர்
பெருமையே? 1
578 மாமுத்த
நிதிசொரியும்
மாமுகில்காள், வேங்கடத்துச்
சாமத்தின்
நிறங்கொண்ட
தாடாளன்
வார்த்தையென்னே,
காமத்தீ
யுள்புகுந்து
கதுவப்பட்டு
இடைக்கங்குல்,
ஏமத்தோர்
தென்றலுக்கிங்-
கிலக்காய்நா
னிருப்பேனே. 2
579 ஒளிவண்ணம்
வளைசிந்தை
உறக்கத்தோ
டிவையெல்லாம்,
எளிமையா
லிட்டென்னை
ஈடழியப்
போயினவால்,
குளிரருவி
வேங்கடத்தென்
கோவிந்தன்
குணம்பாடி,
அளியத்த
மேகங்காள்.
ஆவிகாத்
திருப்பேனே. 3
580 மின்னாகத்
தெழுகின்ற
மேகங்காள், வேங்கடத்துத்
தன்னாகத்
திருமங்கை
தங்கியசீர்
மார்வற்கு,
என்னாகத்
திளங்கொங்கை
விரும்பித்தாம்
நாடோ றும்,
பொன்னாகம்
புல்குதற்கென்
புரிவுடைமை
செப்புமினே. 4
581 வான்கொண்டு
கிளர்ந்தெழுந்த
மாமுகில்காள், வேங்கடத்துத்
தேன்கொண்ட
மலர்ச்சிதறத்
திரண்டேறிப்
பொழிவீர்காள்,
ஊன்கொண்ட
வள்ளுகிரால்
இரணியனை
யுடலிடந்தான்,
தான்கொண்ட
சரிவளைகள்
தருமாகில்
சாற்றுமினே. 5
582 சலங்கொண்டு
கிளர்ந்தெழுந்த
தண்முகில்காள், மாவலியை
நிலங்கொண்டான்
வேங்கடத்தே
நிரந்தேறிப்
பொழிவீர்காள்,
உலங்குண்ட
விளங்கனிபோல்
உள்மெலியப்
புகுந்து,என்னை
நலங்கொண்ட
நாரணற்கென்
நடலைநோய்
செப்புமினே. 6
583 சங்கமா
கடல்கடைந்தான்
தண்முகில்காள், வேங்கடத்துச்
செங்கண்மால்
சேவடிக்கீழ்
அடிவீழ்ச்சி
விண்ணப்பம்,
கொங்கைமேல்
குங்குமத்தின்
குழம்பழியப்
புகுந்து,ஒருநாள்
தங்குமே
லென்னாவி
தங்குமென்
றுரயீரே. 7
584 கார்காலத்
தெழுகின்ற
கார்முகில்காள், வேங்கடத்துப்
போர்காலத்
தெழுந்தருளிப்
பொருதவனார்
பேர்சொல்லி,
நீர்காலத்
தெருக்கிலம்
பழவிலைபோல்
வீழ்வேனை,
வார்காலத்
தொருநாள்தம்
வாசகம்தந்
தருளாரே. 8
585 மதயானை
போலெழுந்த
மாமுகில்காள், வேங்கடத்தைப்
பதியாக
வாழ்வீர்காள்.
பாம்பணையான்
வார்த்தையென்னே,
கதியென்றும்
தானாவான்
கருதாது,ஓர் பெண்கொடியை
வதைசெய்தான்.
என்னும்சொல்
வையகத்தார்
மதியாரே. 9
586 நாகத்தி
னணையானை
நன்னுதலாள்
நயந்துரைசெய்,
மேகத்தை
வேங்கடக்கோன்
விடுதூதில்
விண்ணப்பம்,
போகத்தில்
வழுவாத
புதுவையர்கோன்
கோதைதமிழ்,
ஆகத்து
வைத்துரைப்பார்
அவரடியா
ராகுவரே. 10:
9. சிந்தூரச்
செம்பொடி
கலிநிலைத்துறை
587 சிந்துரச்
செம்பொடிப்போல்
திருமாலிருஞ்
சோலையெங்கும்,
இந்திர
கோபங்களே
எழுந்தும்பரந்
திட்டனவால்,
மந்தரம்
நாட்டியன்று
மதுரக்கொழுஞ்
சாறுகொண்ட
சுந்தரத்
தோளுடையான்
சுழலையினின்
றுய்துங்கொலோ. 1
588 போர்களி
றுபொரும்மா
லிருஞ்சோலையம்
பூம்புறவில்,
தார்க்கொடி
முல்லைகளும்
தவளநகை
காட்டுகின்ற,
கார்க்கொள்
படாக்கள்நின்று
கழறிச்சிரிக்
கத்தரியேன்,
ஆர்க்கிடு
கோதோழி.
அவன்தார்ச்செய்த
பூசலையே. 2
589 கருவிளை
யொண்மலர்காள்.
காயாமலர்
காள்,திருமால்
உருவொளி
காட்டுகின்றீர்
எனக்குய்வழக்
கொன்றுரையீர்,
திருவிளை
யாடுதிண்டோ ள்
திருமாலிருஞ்
சோலைநம்பி,
வரிவளை
யில்புகுந்து
வந்திபற்றும்
வழ்க்குளதே. 3
590 பைம்பொழில்
வாழ்குயில்காள்.
மயில்காள்.ஒண்
கருவிளைகாள்,
வம்பக்
களங்கனிகாள்.
வண்ணப்பூவை
நறுமலர்காள்,
ஐம்பெரும்
பாதகர்காள்.
அணிமாலிருஞ்
சோலைநின்ற,
எம்பெரு
மானுடைய
நிறமுங்களுக்
கெஞ்செய்வதே ? 4
591 துங்க
மலர்ப்பொழில்சூழ்
திருமாலிருஞ்
சோலைநின்ற,
செங்கட் கருமுகிலின்
திருவுருப்
போல்,மலர்மேல்
தொங்கிய
வண்டினங்காள்.
தொகுபூஞ்சுனை
காள்,சுனையில்
தங்குசெந்
தாமரைகாள்.
எனக்கோர்சரண்
சாற்றுமினே. 5
592 நாறு
நறும்பொழில்மா
லிருஞ்சோலை
நம்பிக்கு, நான்
நூறு
தடாவில்வெண்ணெய்
வாய்நேர்ந்து
பராவிவைத்தேன்,
நூறு
தடாநிறைந்த
அக்கார
வடிசில்சொன்னேன்,
ஏறு
திருவுடையான்
இன்றுவந்திவை
கொள்ளுங்கொலோ. 6
593 இன்றுவந்
தித்தனையும்
அமுதுசெய்
திடப்பெறில்,நான்
ஒன்று
நூறாயிரமாக்
கொடுத்துப்பின்னும்
ஆளும்செய்வன்,
தென்றல்
மணங்கமழும்
திருமாலிருஞ்
சோலைதன்னுள்
நின்ற பிரான்,அடியேன்
மனத்தேவந்து
நேர்படிலே. 7
594 காலை
யெழுந்திருந்து
கரியகுரு
விக்கணங்கள்,
மாலின்
வரவுசொல்லி
மருள்பாடுதல்
மெய்ம்மைகொலோ,
சோலை
மலைப்பெருமான்
துவராபதி
யெம்பெருமான்,
ஆலி
னிலைப்பெருமான்
அவன்
வார்த்தை யுரைக்கின்றதே. 8
595 கோங்கல
ரும்பொழில்மா-
லிருஞ்சோலயில்
கொன்றைகள்மேல்
தூங்குபொன்
மாலைகளோ-
டுடனாய்நின்று
தூங்குகின்றேன்,
பூங்கொள்
திருமுகத்து
மடுத்தூதிய
சங்கொலியும்,
சார்ங்கவில்
நாணொலியும்
தலைப்பெய்வதெஞ்
ஞான்றுகொலோ. 9
596 சந்தொடு
காரகிலும்
சுமந்துதடங்
கள்பொருது,
வந்திழி
யும்சிலம்பா-